உள்ளூர் செய்திகள்

தக்கலையில் கேரள அரசு பஸ் மீது கல் வீச்சு-தொழிலாளி கைது

Published On 2023-02-09 07:12 GMT   |   Update On 2023-02-09 07:12 GMT
  • சுமார் 45 வயது மதிக்க த்தக்க ஓருவர் திடீரென பஸ் மீது கல் வீசினார்.
  • தொழிலாளியான அவர், வீட்டிற்கு செல்ல பஸ்சை நிறுத்தும்படி கைகாட்டி உள்ளார்

கன்னியாகுமரி :

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு கேரள அரசு பஸ் 20 பயணிகளுடன் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டது.

பாப்பனங்கோடு பகுதி யைச் சேர்ந்த ஷாஜி பஸ்சை ஓட்டினார். தக்கலை பகுதியில் உள்ள நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வரும் போது சாலையோரம் சுமார் 45 வயது மதிக்க த்தக்க ஓருவர் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென பஸ் மீது கல் வீசினார்.

இதில்பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது. பஸ் டிரைவர் மற்றும் பயணி களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. தொடர்ந்து பஸ்சை சாலையில் நிறுத்திய டிரைவர் ஷாஜி மற்றும் பயணிகள் சேர்ந்து கல்வீசிய நபரை பிடித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.

கல்வீச்சு சம்பவம் குறித்து கேரள அரசு பஸ்சின் கண்டக்டர் சந்திர சேகர் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பஸ் மீது கல் வீசியவர் போதையில் இருந்தது உறுதியானது.

போலீசார் அவரை கைது செய்து விசாரித்த போது, அவர் வில்லுக்குறியை சேர்ந்த ஆரோக்கிய அருள் ராஜேஷ் (வயது 45) என்பது தெரியவந்தது. மேலும் தொழிலாளியான அவர், வீட்டிற்கு செல்ல பஸ்சை நிறுத்தும்படி கைகாட்டி உள்ளார். ஆனால் பஸ்கள் நிற்காமல் சென்றுள்ளது.

இதனால் ஆத்திரத்தில் கேரள அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

போதை ஆசாமி கேரளா அரசு பஸ்சில் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News