உள்ளூர் செய்திகள்

புனித அல்போன்சா கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம்

Published On 2023-09-15 09:52 GMT   |   Update On 2023-09-15 09:52 GMT
  • மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது
  • மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம்

நாகர்கோவில் : கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லுரியின் வணிகவியல் துறை சார்பில் வணிகவியல் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது. இளையோர் திறன் மேம்பாட்டு என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிலரங்கில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ் தலைமை உரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆேராக்கியசாமி வாழத்துரை வழங்கினார். துைண முதல்வர் சிவனேசன் சிறப்பு விருந்தினராக அறிமுகம் செய்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை லயோலா கல்லூரி வணிக வியல் துறை பேராசிரியர் மதன்குமார் கலந்து கொண்டு மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசி, பயிற்சி குறிப்பேடுகளை வழங்கி பயிற்சி அளித்தார். இதில் வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.

Tags:    

Similar News