உள்ளூர் செய்திகள்

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்பு வனத்தில் தவவேள்வி நிறைவு நாள் விழா

Published On 2023-08-28 07:17 GMT   |   Update On 2023-08-28 07:17 GMT
  • விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு
  • அய்யாவழி அன்பு கொடிமக்கள் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நாகர்கோவில் :

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் கடந்த 111 நாட்களாக தவவேள்வி நடைபெற்றது. இதன் நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது. நாட்டில் அமைதி நிலவவும், தொழில் மேன்மை, கல்வி மேன்மை அறிவியல் மேன்மை போன்றவற்றை வலியு றுத்தியும் அய்யாவழி முறைப்படி ஆன்மீகம் தழைப்பதற்காகவும் இந்த வேள்வி நடைபெற்றது.

நிறைவு நாள் விழா நிகழ்ச்சி அய்யா வழி சமய தலைவர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமையில் நடந்தது. அன்புவனம் நிர்வாகி பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி முன்னிலை வகித்தார்.

விழாவில் விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் முருகேசன் மற்றும் மகாராசன், முத்து கிருஷ்ணன் மற்றும் சேனா பள்ளி கோபாலகிருஷ்ணன், அய்யாவழி அன்பு கொடிமக்கள் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News