உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்

Published On 2023-07-10 09:11 GMT   |   Update On 2023-07-10 09:11 GMT
  • 12-வது வார்டு சக்தி கார்டன் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி
  • குறுக்கு தெருவில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகராட்சி 12-வது வார்டு சக்தி கார்டன் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி, 46-வது வார்டு வண்ணான்விளை சானல் கரை சாலை, குறுக்கு தெருவில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஆகிய வற்றை மாநகரட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

அப்போது மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜா, மாமன்ற உறுப்பினர்கள் சுனில், வீரசூரபெருமாள், ஜெயவிக்ரமன், அய்யப்பன், பகுதி செயலாளர் சேக் மீரான், இளைஞர் அணி அகஸ்தீசன், சரவணன், வட்ட செயலாளர் பெறி, ஜெயகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News