உள்ளூர் செய்திகள்

நர்சு-முதியவர் மாயம்

Published On 2023-11-25 06:53 GMT   |   Update On 2023-11-25 06:53 GMT
  • வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராஜரத்தினத்தை தேடி வருகின்றனர்.
  • சம்பத்தன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

ராஜாக்கமங்கலம், நவ.25-

வெள்ளிச்சந்தை அருகே முட்டம் ஓடை தெருவை சேர்ந்தவர் சகாயம். இவரது மகள் அஸ்வின்ரினி (வயது 27). இவர் ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் காலையில் வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பவில்லை. உடனடியாக பெற்றோர்கள் இவரை உறவினர்கள் வீட்டில் தேடியும் அஸ்வின்ரினி எங்கு சென்றார் என்ற தகவல் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து அவரது தாயார் மஜோரா வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன அஸ்வின்ரினியை தேடி வருகின்றனர். வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 68), கட்டிட தொழிலாளி. இவர் சம்பத்தன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உடனடியாக உறவினர்கள் அவரை பல இடங்களிலும் தேடினர். ஆனால் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராஜரத்தினத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News