உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி கடலில் பிணமாக மிதந்த வட மாநில சுற்றுலா பயணி

Published On 2023-11-02 06:53 GMT   |   Update On 2023-11-02 06:53 GMT
  • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்டனர்.
  • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறை அருகில் உள்ள வாவத்துறை கடலில் நேற்று மாலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிண மாக மிதந்து கொண்டி ருந்தார்.

இதுகுறித்து கன்னியா குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்டனர்.

அதன்பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது. அவர் யார்? எந்த ஊர்? என்பன போன்ற எந்த விவரமும் தெரியவில்லை. அவர் வட மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணியாக இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

சுமார் 5 அடி உயரம், புது நிறம். அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண் டரா? அல்லது கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது அவரை வேறு எங்காவது வைத்து கொலை செய்து விட்டு அவரது பிணத்தை கடலில் வீசி வீட்டு சென்றார்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News