உள்ளூர் செய்திகள்
குமரியில் தேசிய அளவிலான அடிமுறை, களரி, சிலம்பப்போட்டி
- நாகர்கோவில் லெமூரியா வர்மக்களரி அடிமுறை உலக கூட்டமைப்பு சார்பில் நடந்தது.
- 3 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் லெமூரியா வர்மக்களரி அடிமுறை உலக கூட்டமைப்பு சார்பில் தேசிய அளவிலான அடிமுறை, களரி, சிலம்பப்போட்டி குமரி மாவட்டத்தில் நடந்தது. இந்த போட்டியில் 196 பிரிவுகளில் 3 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அருகில் லெமூரியா வர்மக்களரி அமைப்பு நிர்வாகிகள் உள்ளனர்.