உள்ளூர் செய்திகள்

குமரியில் தேசிய அளவிலான அடிமுறை, களரி, சிலம்பப்போட்டி

Published On 2022-08-07 08:23 GMT   |   Update On 2022-08-07 08:23 GMT
  • நாகர்கோவில் லெமூரியா வர்மக்களரி அடிமுறை உலக கூட்டமைப்பு சார்பில் நடந்தது.
  • 3 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் லெமூரியா வர்மக்களரி அடிமுறை உலக கூட்டமைப்பு சார்பில் தேசிய அளவிலான அடிமுறை, களரி, சிலம்பப்போட்டி குமரி மாவட்டத்தில் நடந்தது. இந்த போட்டியில் 196 பிரிவுகளில் 3 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அருகில் லெமூரியா வர்மக்களரி அமைப்பு நிர்வாகிகள் உள்ளனர்.

Tags:    

Similar News