உள்ளூர் செய்திகள்

நாகர்.கோர்ட்டு முன்பு மறியலில் ஈடுபட்ட 60 வக்கீல்கள் மீது வழக்கு

Published On 2023-04-20 11:54 IST   |   Update On 2023-04-20 11:54:00 IST
  • முள்ளம்பன்றி வேட்டையாடுவதாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
  • கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் வழக்கறிஞர்கள் ஆவார்கள்.

நாகர்கோவில் :

ஆரல்வாய்மொழி அருகே தெற்கு கருங்குளம் பகுதியில் முள்ளம்பன்றி வேட்டையாடுவதாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

பூதப்பாண்டி வன அதிகாரிகள் தெற்கு கருங்குளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டி ருந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து மேலும் 3 பேரை வனத்துறை யினர் பிடித்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பறி முதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 5 பேர் மீதும் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்த னர்.

கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் வழக்கறிஞர்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்ட 2 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில் வழக்கறிஞர்கள் 3 பேரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்.

வக்கீல்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். வக்கீல் சங்க தலைவர் பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அவர்கள் திடீரென கோர்ட் வளாகத்தின் முன்பு சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.

போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சாமுவேல் கொடுத்த புகாரின் பேரில் வக்கீல் சங்க தலைவர் பால ஜனாதிபதி, வக்கீல்கள் சரவணன், மரிய ஸ்டீபன், சோமசுந்தரம், பாலாஜி உள்பட 60 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News