உள்ளூர் செய்திகள்

குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - தொழிலாளி பலி

Published On 2023-10-18 07:27 GMT   |   Update On 2023-10-18 07:27 GMT
  • அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவரை மீட்டு மார்த்தாண்டம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
  • அர்ச்சுனனின் உடல் இன்று குழித்துறை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது

திருவட்டார் :

குலசேகரம் அருகே திருநந்திக்கரை பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 54). ரப்பர்பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார் இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் ஒரு மகளும் மகனும் உள்ளனர் மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்.

நேற்று மாலை அர்ச்சுனன் திருநந்திகரையில் இருந்து குலசேகரம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வரும் போது பேச்சிப்பாறை சேனங்கோடு பகுதியை சேர்ந்த விஜோ ஜோசப்பு என்ற பள்ளி மாணவன் தனது இரு சக்கர வாகனத்தில் குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறை நோக்கி வந்தான். இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன.

இதில் அர்ச்சுனன் தூக்கி வீசப்பட்டார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவரை மீட்டு மார்த்தாண்டம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று இரவு அர்ச்சுனன் இறந்து விட்டார்.

இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் விஜோ ஜோசப் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். அர்ச்சுனனின் உடல் இன்று குழித்துறை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.

Tags:    

Similar News