உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

இரணியல் அருகே மேள கலைஞர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-11-23 16:32 IST   |   Update On 2022-11-23 16:32:00 IST
  • சம்பவத்தன்று வில்லுக்குறி 4 வழி சாலை அருகே சுஜித் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
  • இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கன்னியாகுமரி:

தக்கலை அருகே உள்ள குமாரபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சுஜித் (வயது24). இவர் இரணியல் அருகே உள்ள ஒரு பேண்ட் செட் குழுவில் சிங்காரி மேளம் இசைத்து வந்தார். சம்பவத்தன்று வில்லுக்குறி 4 வழி சாலை அருகே சுஜித் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு சுஜித் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது தந்தை சேகர் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News