உள்ளூர் செய்திகள்
திருவட்டார் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
- ரப்பர் மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டார்.
- கால்தவறி ஆற்றுக்குள் விழுந்தார்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே உள்ள செங்கோடி ஊர டியைச் சேர்ந்தவர் அருள் தாஸ் (வயது 38), ரப்பர் தோட்ட தொழிலாளி.
நேற்று மாலை இவர் ரப்பர் மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டார். இதற்காக மாத்தூர் தொட்டிப்பாலம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அருள்தாஸ் கால்தவறி ஆற்றுக்குள் விழுந்தார். அவரை சக தொழிலாளர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் நீரில் மூழ்கி அருள்தாஸ் இறந்து விட்டார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் திருவட்டார் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.