உள்ளூர் செய்திகள்

வழிபாட்டு தலத்தில் ஒலி பெருக்கி சப்தத்தை கட்டுப்படுத்த பாதயாத்திரை செல்ல முயன்ற லெனினிஸ்டு நிர்வாகிகள் கைது

Published On 2022-06-13 07:16 GMT   |   Update On 2022-06-13 07:16 GMT
  • பாதயாத்திரை செல்ல முயன்ற லெனினிஸ்டு நிர்வாகிகள்
  • வழிப்பாட்டு கூரை உச்சியிலும், மரங்களிலும் ஒலி பெருக்கி அமைக்க கூடாது என கோஷம்

கன்னியாகுமரி:

வழிப்பாட்டு தலங்களில் ஒலி சப்தம் அளவை கட்டுப்படுத்த வலியுறுத்தி குளச்சலில் பாதயாத்திரை செல்வதாக குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனி னிஸ்டு (மக்கள் ஜனநாயகம்) நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.

அதன்படி மாவட்ட செயலாளர் வக்கீல் பால்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மேரி ஸ்டெல்லா, பரமே ஸ்வரன், தனேஷ் மற்றும் தனபால், கிரேசி, அமலா, ஜோசப், வக்கீல் குமார் ஆகியோர் குளச்சல் காம ராஜர் பஸ் ஸ்டாண்டு அருகே கூடினர். அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி வழிப்பாட்டு தலங்களில் 45 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி பெருக்கி வைக்கக்கூடாது, வழிப்பாட்டு கூரை உச்சியிலும், மரங்களிலும் ஒலி பெருக்கி அமைக்க கூடாது என கோஷமிட்டனர்.

பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியு றுத்தி ரீத்தாபுரம் நோக்கி பாதயாத்திரை செல்ல முயன்றனர். அப்போது அவர்களை அங்கு பாது காப்பு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News