உள்ளூர் செய்திகள்

கருங்கல் பேரூராட்சி ஊற்றுமுகத்தில் வடிகால் அமைக்க வேண்டும்

Published On 2023-09-24 07:30 GMT   |   Update On 2023-09-24 07:30 GMT
  • கிராம சபா கூட்டத்தில் வலியுறுத்தல்
  • செறியூட்டப்பட்ட அரிசிகளை ரேசன் கடைகளில் தடை செய்ய வேண்டும்

கருங்கல் :

கருங்கல் பேரூராட்சி 13-வது வார்டு பகுதி சபா கூட்டம் ஊற்றுமுகம் பகுதியில் நடைபெற்றது. பேரூராட்சி உறுப்பினர் பிறேம்சிங் தலைமை தாங்கினார். பகுதி தலைவர் மோகன், பேரூராட்சி அலுவலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். ஊற்றுமுகம் பகுதியை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

மாங்கன்றுவிளை அய்யா கோயில் முதல் ஊற்றுமுகம் பாலம் வரை மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும், ஊற்றுமுகம் பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும், மாமூட்டுகுளம் கரை கட்டி படித்துறை அமைக்க வேண்டும், ஊற்றுமுகம் பகுதியில் சானல் கரைகட்டி சாலை அமைக்க வேண்டும், செறியூட்டப்பட்ட அரிசிகளை ரேசன் கடைகளில் தடை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News