இரணியலில் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி
- கல்லூரி சங்கச் செயலர் ரமேஷ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜெரின் ஜோஸ் போட்டி நிகழ்வினை ஒருங்கிணைத்தார்கள்.
இரணியல் :
இரணியல் லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையிலான ஆண்கள் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு பிள்ளை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச பூப்பந்தாட்ட வீரர் ராஜபெருமாள், இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன். ராஜரத்தினம் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். கல்லூரி தலைவர் மற்றும் செயலர் பேராசிரியர் ராஜகோபால், கல்லூரி சங்கச் செயலர் ரமேஷ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனரும் தலைவருமான ஆறுமுகம் மற்றும் கபடி போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜான் ரஸ்கின், சிவக்குமார் மற்றும் விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜெரின் ஜோஸ் போட்டி நிகழ்வினை ஒருங்கிணைத்தார்கள்.