உள்ளூர் செய்திகள்

கருங்கலில் இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

Published On 2023-10-31 07:26 GMT   |   Update On 2023-10-31 07:26 GMT
  • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
  • கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

மார்த்தாண்டம் :

கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் கருங்கல் ராஜீவ் சந்திப்பில் நடைபெற்ற இந்திரா காந்தி நினைவு தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கொடும் செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் குமரேசன், பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், கிள்ளியூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் டிஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், மாவட்ட நிர்வாகிகள் ஆசீர்பிரைட்சிங், குமார், சுனில்குமார், ஊராட்சி, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஜெபர்சன், சுரேஷ் கியூபர்ட் ராஜ், ஜெஸ்டின், அருள்ராஜ், பிறைட், ஸ்டாலின், மரிய அருள்தாஸ், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News