உள்ளூர் செய்திகள்

பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் அளவு அதிகரிப்பு

Published On 2023-11-21 06:56 GMT   |   Update On 2023-11-21 06:56 GMT
  • திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை
  • முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவான 25 அடி நிரம்பி வழிகிறது.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.

மாவட்டத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பி உள்ளது. அணைகள், குளங் கள் நிரம்பி உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அணைகள் மற்றும் குளங் கள் நீர்மட்டத்தை கண் காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ சாணி அணை பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது.

இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வருகிறது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்ததையடுத்து அணை யில் இருந்து வெளி யேற்றப்படும் தண்ணீரின் அளவையும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அதிகரித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று 100 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று அணையிலிருந்து வெளி யேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட் டுள்ளது.

அணையில் இருந்து 401 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 355 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றாறு 1 அணை யிலிருந்தும் 129 கன அடி உபரிநீரும், 100 கன அடி தண்ணீர் மதகுகள் வழி யாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருவதால் கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரு கிறது. இதனால் திற்பரப்பு அருவியில் இன்று 3-வது நாளாக குளிக்க தடை விதிக் கப்பட்டுள்ளது. அருவியில் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டதால் சுற்றுலா பணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.05 அடியாக உள்ளது. அணைக்கு 595 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.31 அடியாக உள்ளது. அணைக்கு 460 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றார்-1 அணை யின் நீர்மட்டம் 15.81 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.91 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 8.20 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாக உள்ளது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவான 25 அடி நிரம்பி வழிகிறது.

Tags:    

Similar News