உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

குலசேகரம் அருகே இரும்புக்கடை அதிபர் தீக்குளித்து தற்கொலை

Published On 2022-10-31 11:36 GMT   |   Update On 2022-10-31 11:36 GMT
  • தொழில் நஷ்டத்தால் விபரீத முடிவு
  • மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

கன்னியாகுமரி:

குலசேகரம் அருகே உள்ள நாகக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 50). இவர் சொந்தமாக இரும்புக்கடை நடத்தி வருகிறார்.

இவருக்கு கரோலின் மலர் என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். 2-வது மகள் பி.டி.எஸ். படித்து வருகிறார். சுமார் 6 மாத காலமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

நேற்று இரவு அவர் வீட்டின் முன் பகுதியில் இருந்து பெட்ரோல் எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவியும் அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அவர்கள் சுரேஷ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை சுரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி கரோலின் மலர் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேஷ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News