உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு

Published On 2023-11-06 12:12 IST   |   Update On 2023-11-06 12:12:00 IST
  • நிவாரணம் கேட்டு அரசுக்கு கோரிக்கை
  • ஒரு கிலோ ரூ.118-க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது

திருவட்டார் :

குமரி மாவட்டத்தில் முக்கியமான தொழில் பால் வெட்டும் தொழில். இங்கு இருந்து வெளி மாநிலங்க ளுக்கும், வெளிநாட்டிற்கும் அதிக அளவு ரப்பர் ஷீட்டுகள் ஏற்றுமதி செய்யப்ப டுகிறது. பேச்சிப் பாறை, கோதையாறு, குற்றியாறு, கடையாலுமூடு, பெருஞ்சாணி போன்ற பகுதிகளில் அதிக அளவில் ரப்பர் மரங்கள் பயிரிடப்படுகிறது.

இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் பரப்பளவில் ரப்பர் மரங்கள் பயிரிடப்பட்டு பராமரி க்கப்பட்டு வருகி றது. அரசு தோட்டங்க ளில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார்கள்.

இங்கு பயிரிடப்பட்ட ரப்பர் மரங்க ளில் இருந்து வரும் ரப்பர் ஷிட்டுகள் முதல் தர மானது. இதனால் இங்கு உள்ள ரப்பர் ஷீட்டுகளுக்கு அதிக அளவு ஆர்டர்கள் வரும்.

தற்போது வட கிழக்கு பருவமழை ஒரு மாதமாக பெய்து வருகிறது. இதனால் பால் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேறு தொழில் எதுவும் தெரியாமல் இந்த தொழிலை மட்டும் நம்பி இருக்கும் தோட்ட தொழி லாளர்கள், தங்கள் அன்றாட செலவுக்கு பணம் இல்லாமல் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கு பயிரிடப்பட்டு வந்த ரப்பர் ஷிட்டுகள் ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.118-க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது. மழையினால் பால் வெட்டும் தொழில் பெரிய அளவில் பாதிக்கப் படட்டுள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் தோட்ட தொழி லாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ ரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News