உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

நாகர்கோவிலில் டி.என்.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்விற்கான இலவச பயிற்சி

Published On 2022-11-18 10:08 GMT   |   Update On 2022-11-18 10:08 GMT
  • 21-ந்தேதி அறிமுக வகுப்பு நடக்கிறது
  • மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

நாகர்கோவில்:

தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தால் நடைபெற்ற குரூப்-2 மற்றும் 2ஏ முதல் நிலைத் தேர்வில் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் பயின்ற 46 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

மேலும் குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தத் திட்ட மிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிமுக வகுப்பு வருகிற 21-ந் தேதி (திங்கள்கிழமை) பகல் 11 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடை பெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் நகல் மற்றும் தேர்வு மைய அனுமதிச் சீட்டு ஆகியவற்றுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு 21-ந் தேதி வருகை புரியுமாறு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரி வித்து உள்ளார்.

Tags:    

Similar News