உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் பொன்ஜெஸ்லி ஆஸ்பத்திரியில் இலவச இதயவியல் சிகிச்சை முகாம்

Published On 2022-08-04 07:15 GMT   |   Update On 2022-08-04 07:15 GMT
  • பொதுமக்கள் நலன்கருதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது
  • சர்க்கரை பரிசோதனை, ஈசிஜி, எக்கோ போன்ற பரிசோதனைகள், ஆலோசனைகள், சிகிச்சை முறை குறித்த விளக்கங்கள் இலவசமாக அளிக்கப்படும்.

நாகர்கோவில், ஆக.4-

நாகர்கோவில் களியங்காட்டில் உள்ள பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் நலன்கருதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மூளை, வயிறு, நரம்பு மண் டலம் போன்ற பிரச்னைகளுக்காக சிறப்பு நிபுணர்கள் கலந்துகொண்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் ஏராளமான மக்கள் வந்து பரிசோதனையும், சிகிச்சையும் பெற்று பயனடைந்து உள்ளனர்.

தற்போது இலவச சிறப்பு இதயவியல் சிகிச்சை முகாம் வருகிற 6 மற்றும் 7-ந்தேதிகளில் நடக்கிறது. இந்த முகாமில் நெஞ்சு வலி, மயக்கம், படபடப்பு, அதிக வியர்வை, உடல் சோர்வு மூச்சு விடுவதில் சிரமம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், புகை பிடிப்பவர்கள், அதிக மாக மது அருந்துபவர்கள், நீண்ட நாட்களாக மாத்திரை மருந்து எடுத்து கொள்பவர்கள் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த முகாமில், சர்க்கரை பரிசோதனை, ஈசிஜி, எக்கோ போன்ற பரிசோதனைகள், ஆலோசனைகள், சிகிச்சை முறை குறித்த விளக்கங்கள் இலவசமாக அளிக்கப்படும்.

பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத் திரியின் இதயவியல் நிபு ணர் டாக்டர் வெங்கடேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக் கின்றனர். இந்த தகவலை பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ் பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜார்ஜ் தெரிவித் துள்ளார்.

Tags:    

Similar News