உள்ளூர் செய்திகள்

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்ல அனுமதி இல்லை

Published On 2022-09-18 07:06 GMT   |   Update On 2022-09-18 07:06 GMT
  • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
  • அவரவர் கிராமங்களில் இருந்தும் வாய்ப்புள்ள பிற இடங்களில் இருந்தும் பாதுகாப்புடன் மீன்பிடிக்க செல்லுமாறு வேண்டுகோள்

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தொடர்ந்து கடல் அலை சீற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் துறைமுக முகத்துவாரத்தினை கடந்து செல்லும் படகுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 3 மாதங்களில் மீன்பிடித்துறைமுக முகத்து வாரத்தில் கடல் அலை சீற்றத்தால் படகுகளுக்கும் மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பினை ஆய்வு செய்ததில் எந்திரம் பொருத்திய வள்ளங்களும், எத்திரம் பொருத்தாத கட்டுமரங்களும் பாதிப்பு அடைந்து வருவது தெரி கிறது. இதனை கருத்தில் கொண்டு தற்பொ ழுது மீன்பிடிப்பு மற் றும் மீன்விற்பனை தொடர் பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூல மாக அறிவிப்பு வழங்கப்பட் டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

தேங்காப்பட்டணம் முகத்துவாரத்தில் கடல் அலை சீற்றத்தின் பாதிப்பு உள்ளதாலும், பராமரிப்பு பணிகள் முடியும் வரை துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தொழிலுக்கு செல்ல தற்போது அனுமதி இல்லை.

எனவே எந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகள் அவரவர் கிரா மங்களில் இருந்தும் வாய்ப்புள்ள பிற இடங் களில் இருந்தும் பாது காப்புடன் மீன்பிடிக்க செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்லும் விசைப்படகுகள், வானிலை எச்சரிக்கை காலங்கள் தவிர இதர நாட்களில் உரிய மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடி தொழில் மேற் கொள்ளலாம். மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் படகு களின் பாதுகாப்பை கருத் தில் கொண்டு அறிவிக் கப்பட்டுள்ள வழிமுறைகளை அனைத்து படகு உரிமையாளர்களும், துறைமுக பயனீட்டாளர்களும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Tags:    

Similar News