மணவாளக்குறிச்சி அருகே கார் மோதி எலக்ட்ரீசியன் படுகாயம்
- மணவாளக்குறிச்சியிலிருந்து மண்டைக்காடு நோக்கி வேகமாக வந்த கார், மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
- சி.சி.டி.வி.கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
மணவாளக்குறிச்சி :
குளச்சல் அருகே உள்ள குறும்பனையை சேர்ந்தவர் டையோன்சியஸ் (வயது 48), எலக்ட்ரீசியன். இவர் தற்போது ராஜாக்கமங்கலம் அருகே காரவிளையில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் டையோன்சியஸ் காரவிளைக்கு சென்று கொண்டிருந்தார். கூட்டுமங்கலம் பகுதியில் சென்றபோது, மணவாளக்குறிச்சியிலிருந்து மண்டைக்காடு நோக்கி வேகமாக வந்த கார், மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் டையோன்சியஸ் பலத்த காயம் அடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு உடையார்விளை யில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர். அப்பகுதி சி.சி.டி.வி.கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.