குழித்துறை உபகோட்ட பகுதியில் மின்தடை
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் மின் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது
- பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி :
குழித்துறை உப கோட்டத் திற்குட்பட்ட புதுக்கடை, கருங்கல், கொல்லங்கோடு, நம்பாளி, ரவிபுதூர்கடை, கிள்ளியூர், பள்ளியாடி, சூரியகோடு மின் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளில் நாளை மறுநாள் 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் மின் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின் வினியோக செயற்பொ றியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
நாளை மறுநாள் (1-ந்தேதி) தொழிக்கோடு, காட்டுவிளை, மேல் மிடாலம், பருத்திவிளை, பெரியவிளை, கிள்ளியூர், சடையன்குழி, மூலைதட்டு, பண்டாரவிளை, கூரன் விளை ஆகிய பகுதிகளிலும்,
2-ந்தேதி வெள்ளை யம்பலம், செம்பருத்திகுளம், காட்டுவிளை, கிராத்தூர், கரியறை, அஞ்சாடி, கண்ணனூர், வெள்ளி கோடு, தாமரைகுளம், ஊசிகோடு, வெட்டுவிளை, செம்மான்விளை, குழிச் சாணி ஆகிய பகுதி களிலும்,
3-ந்தேதி பரவை, செந்தறை, இனை யம்தோப்பு, தேரிவிளை, பிடாகை, பாலமடம், வாழைதோட்டம், இலவு விளை, நெல்வேலி, கல்லுக்கூட்டம், புல்லாணி, நுள்ளி, தட்டான்குளம், கஞ்சிக்குழி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்படுகிறது.
இதேபோல் 4-ந்தேதி அனந்தமங்கலம், தைவிடை, கூட்டாலுமூடு, பைங்குளம், நீர்விளாகம், வாழ் வச்சகோஷ்டம், ஆப்பிகோடு, கண்ணத் தான்குழி, வாறுத்தட்டு, கல்லுமூடு ஆகிய பகுதி களிலும்,
5-ந்தேதி காப்புக்காடு, சென்னிதோட்டம், வயக்கரை, மாராயபுரம், விளாத்திவிளை, நடுத்தேரி, குடுக்கச்சிவிளை, வெள்ளி யாவிளை, காக்கவிளை" பி.பி.எம் பிடாகை, தக்காளிவிளை, பஞ்ச விளை, கருமரம், பிங்குளம், வடக்குமாங்கரை, முருங்க விளை, கரிக்கி ஆகிய பகுதிகளிலும், 7-ந்தேதி அம்சி, வேட்டமங்கலம், வழுத்தூர், கும்பக்கோடு, எடப்பாடு, ததையோபுரம், இரவி புத்தம் துறை, சின்னத்துறை, சடையங் கால், வண்டல் ஆகிய பகுதிகளிலும்,
8-ந்தேதி வெள்ளங் கொட்டி, பொட்ட குழி, பூட்டேற்றி, கீரியான் தோட்டம், தாழை யன்கோட்டை, காட்டுக்கடை, பாலவிளை, இறையான் தோட்டம், அரசகுளம், கோட்டவிளை, கோலவிளை, வளனூர் பகுதிகளிலும் மின்தடை ஏற்படுகிறது.
மேலும் 9-ந்தேதி தேங்காய் பட்டணம், பனங்கால்முக்கு, ராமன் துறை, முள்ளுர்துறை, ஆலன்கோடு, பாறை குளம், சரல்முக்கு, காடுவெட்டி, கோழிப்போர்விளை ஆகிய பகுதிகளிலும்,
10-ந்தேதி குற்றிப்பாறவி ளை, கானாவூர், மேல்மிடா லம், கைதவிளாகம், சுந்தரவனம், தளச் சான்விளை, கூவரவிளை உள்ளிட்ட பகுதிகளிலும்,
11-ந்தேதி கீழ்குளம், வில்லாரிவிளை, பொத்தை யன்விளை, புத்தன்துறை, இனையம், ஓடக்கரை, சமத்துவபுரம், கலிங்கரா ஜபுரம், கோதேஸ்வரம், கண்ணனூர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.