உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே முதியவர் தற்கொலை

Published On 2023-10-22 13:54 IST   |   Update On 2023-10-22 13:54:00 IST
  • சில நாட்களாகவே மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
  • மாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்தபோது கதவு சாத்திய நிலையில கிடந்துள்ளது

இரணியல் :

இரணியல் அருகே உள்ள ஆலங்கோடு புதுகாடு வெட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 57). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி தங்கபாய் (49). இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு.

மூத்த மகள் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகள் வெளிநாட்டில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். செல்லப்பன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை தங்கபாய் தனக்கு உடல் நலம் சரியில்லாததால் நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்துவாங்க சென்று விட்டார். செல்லப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் மாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்தபோது கதவு சாத்திய நிலையில கிடந்துள்ளது. கதவை திறந்து உள்ளே சென்றபோது செல்லப்பன் பேன் மாட்டும் கொக்கியில் கயிற்றில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்லப்பன் இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து தங்கபாய் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News