உள்ளூர் செய்திகள்
மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டியில் டாக்டர் தினக்ஷ் குமார் வெற்றி
- நாகர்கோவில் ரோட்டரி சங்கம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நாகர்கோவில் ;
கன்னியாகுமரி மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி ஒய்.எம்.சி.ஏ. மற்றும் நாகர்கோவில் ரோட்டரி சங்கம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆண்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் பார்வதிபுரம் ஈடன்ஸ் மருத்துவமனையின் டாக்டர் தினக்ஷ் குமார் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். 2-ம் இடத்தை கிறிஸ்டோ வில்மோகன் பெற்றார்.
பெண்கள் பிரிவில் அனிலா பானு வெற்றி பெற்றார். 19 வயதிற்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் வைஷ்ணவி, ஆண்கள் பிரிவில் தருண், 17 வயதிற்குட்பட்டோர்களில் டிரிபோன்ஸா, தருண் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஒய்.எம்.சி.ஏ.தலைவர் டட்லிபென், செயலர் ரஞ்சித் அம்பலோஸ், விஜயகுமரி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.