உள்ளூர் செய்திகள்
சொத்தவிளை சிவசுடலை மாடசுவாமி கோவில் கொடை விழாவில் அன்னதானம்
- ஜவான் அய்யப்பன் தொடங்கி வைத்தார்
- பா.ஜ.க. உறுப்பினர் அமர்நாத், கோவில் நிர்வாகி ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
என்.ஜி.ஓ.காலனி :
சொத்தவிளை சிவசுடலைமாட சுவாமி கோவிலில் வருடாந்திர கொடை விழாவினை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை பா.ஜ.க பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான ஜவான் அய்யப்பன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் சுடலைமணி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய துணை தலைவர் ராஜன், பா.ஜ.க. உறுப்பினர் அமர்நாத், கோவில் நிர்வாகி ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.