உள்ளூர் செய்திகள்

சுசீந்திரம் அருகே ஆற்றில் முதியவர் பிணம்

Published On 2022-09-19 07:00 GMT   |   Update On 2022-09-19 07:00 GMT
  • தனியாக வசித்து வந்த இவர் குடிப்பழக்கம் உடையவர். கடந்த 17-ந் தேதி அருகில் உள்ள ஆற்றில் குளிக்க சென்ற பரமேசுவரன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
  • புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவருடைய உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

கன்னியாகுமரி :

சுசீந்திரம்அருகே உள்ள சங்கரன்புதூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பரமேஷ்வரன் (வயது 64). தனியாக வசித்து வந்த இவர் குடிப்பழக்கம் உடையவர். கடந்த 17-ந் தேதி அருகில் உள்ள ஆற்றில் குளிக்க சென்ற பரமேசுவரன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. காலையில் ஆற்றில் குளிக்க சென்றவர்கள், அங்கு அவர் பிணமாக கிடப்பதை பார்த்து மகன் ரமேசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவருடைய உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News