உள்ளூர் செய்திகள்

அம்மாண்டிவிளை அருகே வாகனம் மோதி கோவில் மண்டபம் சேதம்

Published On 2022-09-05 13:44 IST   |   Update On 2022-09-05 13:44:00 IST
  • வெள்ள மோடியில் ஊய்காட்டு சிவ சுடலை மாடன் கோவில் உள்ளது.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி:

அம்மாண்டிவிளை அருகே உள்ள வெள்ள மோடியில் ஊய்காட்டு சிவ சுடலை மாடன் கோவில் உள்ளது.

இந்த கோவில் முன்பு மாசானசாமி மண்டபம் இருக்கிறது. நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மாசானசாமி மண்டபம் மீது மோதியது. இதில் கோவில் மண்டபம் சேதமடைந்தது.

இச்சம்பவம் குறித்து ஊர் தலைவர் ராதாகிருஷ்ணன் மணவாளக்குறிச்சி போலீ சில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News