உள்ளூர் செய்திகள்

டாக்பியா மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழா

Published On 2023-10-29 07:57 GMT   |   Update On 2023-10-29 07:57 GMT
  • 27-ந்தேதி மயிலாடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வைத்து திருமணம் நடந்தது.
  • பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசுகள் வழங்கினர்.

நாகர்கோவில் :

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க குமரி மாவட்ட செயலாள ரும், ஆரல்வாய் மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாள ருமான சகாய திலகராஜ்- மார்சலின் தம்பதியினரின் மகன் நவீனுக்கும், தேவதாஸ்-லோசனியின் மகள் ஒபிலியாவுக்கும் கடந்த 27-ந்தேதி மயிலாடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வைத்து திருமணம் நடந்தது.

அதன் பின் மாலையில் நாகர்கோவில் கிருஷ்ண மஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சி குமரி மாவட்ட டாக்பியா தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில கவுரவ பொது செயலாளர் குப்புசாமி, மாநில பொது செயலாளர் காமராஜ் பாண்டியன், மாநில தலைவர் மணிவண் ணன், மாநில பொருளாளர் சேகர், மாநில துணை தலைவர்கள் நடராஜன், மாரிமுத்து, மாநில இைண செயலாளர்கள் சேகர், செந்தில்குமார், குமரி மாவட்ட டாக்பியா மாவட்ட ெபாருளாளர் வின்சென்ட் ராஜ், மாவட்ட துணை தலைவர் சந்திரகுமார், மாவட்ட இணை செயலா ளர் ரமணி, வசந்த பிரபா, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் தக்கலை செயலாளர் பால்சுந்தரம் மற்றும் குமரி மாவட்ட டாக்பியா அனைத்து கிளை தலைவர், செயலாளர்கள், பணியாளர் கள், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்ைம கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் கோட்டார் சவேரி யார் கோவில் ஊர் தலைவர், நிர்வாகிகள், குடும்பத்தி னர்கள், வங்கி அதிகாரிகள், மாவட்ட கூட்டுறவு துறை உதவி இயக்குனர், அரசு துறை நண்பர்கள், கோட்டார் மறை மாவட்ட பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசுகள் வழங்கினர்.

மணவிழா ஏற்பாடுகளை டாக்பியா மாவட்ட செயலா ளர் சகாய திலகராஜ், அவரது மனைவி மார்சலின், மரு மகள் ஜெனிஸ்டன் பர்னா ண்டோ, மகள் நிவேதா மற்றும் சகோதரர்கள், குடும்பத்தினர்கள் செய்தி ருந்தனர்.

Tags:    

Similar News