உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு வார விழா

Published On 2023-11-19 07:39 GMT   |   Update On 2023-11-19 07:39 GMT
  • நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் கொண்டாடப்பட இருக்கிறது.
  • விழா ஏற்பாடுகளை அனைத்திந்திய கூட்டுறவு வார விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

நாகர்கோவில் :

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14-ந்தேதி முதல் நாளை (20-ந்தேதி) வரை நாடு முழுவதும் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டா டப்பட்டு வருகிறது.

70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தமிழ்நாட்டின் பொருளா தாரத்தை ஒரு டிரில்லிய னாக்குவதில் கூட்டுறவின் பங்கு எனும் கருப்பொருளை மையமாக கொண்டு கொண்டாடப்பட்டு வரு கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் 7-வது நாளான நாளை 20-ந்தேதி அன்று கூட்டுறவு கல்வி மற்றும் பயிற்சியை சீரமைத்தல் என்ற தலைப்பில் நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் கொண்டாடப்பட இருக்கிறது.

விழாவிற்கு கன்னியா குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்குகிறார். அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலை வகிக்கிறார். விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பிக்க உள்ளனர்.

விழாவில் பொதுமக்கள், கூட்டுறவாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் கலந்துகொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை அனைத்திந்திய கூட்டுறவு வார விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News