உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

கல்லூரி மாணவி மாயம்

Published On 2022-10-21 07:00 GMT   |   Update On 2022-10-21 07:00 GMT
  • 17-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
  • திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே மேக்கோடு, செங்கோடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு மரிய மிறியல் என்ற மனைவியும் பெனிஷா (வயது 21) என்ற மகளும் உள்ளனர். பெனிஷா குலசேகரம் அருகே தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.

கடந்த 17-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது அங்கு காணவில்லை. உடனே உறவினர்கள் வீடு, தோழிகளிடம் விசாரித்தபோது எங்கே சென்றார் என்பது தெரியவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. பெனிஷாவின் தாயார் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News