உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் கொடி ஏற்றினார்

Published On 2022-08-15 07:26 GMT   |   Update On 2022-08-15 07:26 GMT
  • 205 அரசு ஊழியர்கள்-45 போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது
  • மாணவ-மாண விகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வந்த கலெக்டர் அரவிந்த்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வரவேற்றார். இதை தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

இதை தொடர்ந்து போலீ சார் அணிவகுப்பு மரியாதை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். மூவர்ண கலரிலான பலூனை பறக்க விட்டார். புறாக்களும் பறக்க விடப்பட்டது. பின்னர் போலீசார், ஊர்க்காவல் படை, என்.சி.சி. மாண வர்களின் மரியாதையை ஏற்று கொண்டார்.

இதை தொடர்ந்து நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 14 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 17,ஆயிரத்து 261 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த 45 போலீ சாருக்கு நற் சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.

10 ஊர்க்காவல் படையினருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நெதர்லாந் தில் நடந்த தடகளப்போட்டி யில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்ற போலீஸ் கிருஷ்ண ரேகாவிற்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்க னார்.

ஊராட்சிகளில் சிறப் பாக பணிபுரிந்த ஊராட்சி களுக்கு கேடயங்க ளும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. திங்கள் நகர் பேரூராட்சிக்கு கழிவு நீர் மேலாண்மை சிறப்பு செயல்பாட்டிற்காக கேடயம் வழங்கப்பட்டது.

கிள்ளியூர் பேரூராட்சிக்கு மக்கள் இயக்கம் சிறப்பு செயல்பட்டிற்கும், ஆற்றூர் பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் தடை சிறப்பு செயல்பாட்டிற்கும், கப்பி யறை பேரூராட்சிக்கு திடக் கழிவு செயல்பாட்டிற்கு கேடயங்கள் வழங்கப்பட் டது.

இதைத் தொடர்ந்து தீயணைப்பு துறை, மருத்துவ துறை, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் துறை பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை, வேளாண்துறை, கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப் பாக பணியாற்றிய 205 பேருக்கு சான்றிதழ்களை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.

10 ஆண்டுகள் விபத்து இன்றி பணிபுரிந்தவர்க ளுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப் பட்டது. இதை தொடர்ந்து மாணவ-மாண விகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 8 பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, கலெக்டரின் மனைவி கிருத்திகா, மகன் சிவேஷ், மகள் மசிமா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் மனைவி வைஷாலி, மகள் மிஷ்விக், ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், ராஜா, தாசில்தார் சேகர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News