உள்ளூர் செய்திகள்

பணத் தகராறில் சகோதரர்கள் மோதல்

Published On 2022-07-09 08:13 GMT   |   Update On 2022-07-09 08:13 GMT
  • 4 பேர் மீது வழக்கு
  • பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை

கன்னியாகுமரி:

புதுக்கடை அருகே தேங்காபட்டணம் பகுதி வேட்டமங்கலத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 57). இவரது தம்பி ராஜன். இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் சம்பவ தினம் விஜயகுமாரை அவரது தம்பி ராஜன் அவரது மனைவி பிரிடா மேரி ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த விஜயகுமார் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது போன்று விஜயகுமார் மற்றும் அவரது மனைவி ஜாஸ்மின் சுபலா சேர்ந்து ராஜனை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ராஜன் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் புதுக்கடை போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News