உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி - மாணவ-மாணவிகள் பங்கேற்பு

Published On 2022-11-02 14:17 IST   |   Update On 2022-11-02 14:17:00 IST
  • வளர்ந்த நாடாக உருவாக்க ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் நடந்த பேரணி நாகர்கோவில் டதி பள்ளியில் இருந்து தொடங்கியது
  • மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர்

நாகர்கோவில் :

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் நாகர்கோவிலில் விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. வளர்ந்த நாடாக உருவாக்க ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் நடந்த பேரணி நாகர்கோவில் டதி பள்ளியில் இருந்து தொடங்கியது. அமைச்சர் மனோ தங்கராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர். விழிப்புணர்வு பேரணி மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மணி மேடை,வேப்ப மூடு வழியாக மீண்டும் டதி பள்ளியை வந்தடைந்தது.

நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத்,லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர் பால், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News