உள்ளூர் செய்திகள்

பூதப்பாண்டி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர்

Published On 2023-07-11 06:39 GMT   |   Update On 2023-07-11 06:39 GMT
  • போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
  • 15 வயது சிறுமியை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது

நாகர்கோவில் :

பூதப்பாண்டி அருகே அருமநல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதை யடுத்து அவரது பெற்றோர் மாணவியை பரிசோத னைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துசென்றனர்.

மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த ஜீவகுமார் என்ற 52 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தன்னிடம் நெருங்கி பழகியதாகவும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி யதாக தெரிவித்தார்.

இதனால் பயந்து போய் வெளியே செல்லாமல் இருந்ததாக கூறி மாணவி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுகுறித்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 15 வயது சிறுமியை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மாணவியை மருத்துவ பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News