உள்ளூர் செய்திகள்
ஆரல்வாய்மொழியில் அ.தி.மு.க. தொடக்க விழா கொண்டாட்டம்
- எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது
- ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவருமான முத்துக்கமார் தலைமை தாங்கினார்.
ஆரல்வாய்மொழி,
அ.தி.மு.க. தொடக்க விழாவை முன்னிட்டு தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக ஆரல் வாய்மொழியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவருமான முத்துக்கமார் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுதா பாலகி ருஷ்ணன், ஒன்றிய ஜெய லலிதா பேரவை துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் வக்கீல் பரமேஸ்வரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகி செல்வன், பொதுக்குழு உறுப்பினர் மகாராஜன், தாழக்குடி நகர செயலாளர் பிரம்ம நாயகம், தாழக்குடி பேரூராட்சி மன்ற கவுன்சிலர் ரோகிணி அய்யப்பன், கிளை செயலாளர் அய்யப்பன், கச்சேரி நாகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.