வள்ளியூர் அருகே ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை
- பிரவீன் குமார் நேற்று மாலை வீட்டிலிருந்து திடீரென மாயமானார்
- நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில் :
தென்காசி பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ், இவரது மனைவி உஷா, இவர் நெல்லை மாவட்டம் செட்டிக்குளம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இதனால் இவர்கள் குடும்பத்தோடு செட்டிக்குளத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களது மகன் பிரவீன் குமார் (வயது 23) இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் பிரவீன் குமார் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை வள்ளியூருக்கும் நாங்குநேரிக்கும் இடையே ரெயில்வே தண்டவாளத்தில் பிரவீன்குமார் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத் தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த னா. இது குறித்து அவர்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். பிணமாக கிடந்த பிரவீன்கு மார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரவீன்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள். காதல் விவகாரம் கார ணமாக தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.