சுசீந்திரம் அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
- சிகிச்சைக்காக பக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
என்.ஜி.ஓ.காலனி :
சுசீந்திரம் அருகே உள்ள கீழ தேரூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் முகேஷ் (வயது 25). இவர் கேட்டரிங் படிப்பு படித்து விட்டு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முயன்று வந்துள் ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு முகேஷ் வீட்டிலிருந்து பொருட்கள் வாங்குவ தற்காக கடைக்கு சென்றார். கடைக்கு சென்று விட்டு அவர் தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படுக்கை அறைக்கு சென்ற முகேஷ், நேரம் ஆகியும் வெளியே வராததால் பெற்றோர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது முகேஷ் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முகேஷ் இறந்து விட்டதாக கூறினார்கள்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முகேஷின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.
இதையடுத்து ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள் ஏராளமான திரண்டு இருந்தனர்.