களியக்காவிளை அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை
- மனவேதனையடைந்த நினிஷ் நேற்று அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்
- களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களியக்காவிளை :
களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் ராகவன். கூலி தொழிலாளி. இவரது மகன் நினிஷ் (வயது 24). படிப்பு முடிந்து விட்டு இப்போது கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றித்தி ரிந்ததால் பெற்றோர் இவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் நண்பர்களுடன் சுற்றி திரியாமல் வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் மனவேதனையடைந்த நினிஷ் நேற்று அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மேலும் தனது அறையில் சென்று கதவை சாத்தி விட்டு தூங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து அவரது சகோதரர் அண்ணன் நிஷாந்த் அறையில் சென்று பார்த்த போது நினிஷ் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நினிஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.