உள்ளூர் செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே குளத்தில் முழ்கி சிறுமி பலி

Published On 2023-04-06 12:41 IST   |   Update On 2023-04-06 12:41:00 IST
  • தண்ணீரில் இறங்கி குளித்த போது ரஹீமா எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டார்
  • குளத்திலிருந்து மீட்டு அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கன்னியாகுமரி :


ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பருத்தி விளை பகுதியை சேர்ந்தவர் ஜலிலுல்லா. இவர் வெளி நாட்டில் சில வருடமாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ரஹீமா (வயது 9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அத்திக்கடை அருகே உள்ள சம்பக்குளத்திற்கு உறவினர்களுடன் குளிக்க சென்றார். அப்பொழுது தனது தாயார் சஹினா மற்றும் உறவினர்கள் தண்ணீரில் இறங்கி குளித்த போது ரஹீமா எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். திடீரென ரஹீமாவை காணவில்லை. உறவினர்கள் தேடிய நீரில் தத்தளிப்பதை கண்டனர். உடனே அவரை குளத்திலிருந்து மீட்டு அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ரஹீமா பரிதாபமாக உயிர் இழந்தார்.

இச்சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. போலீசார் ரஹீமாவின் உடலை கைப் பற்றி மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News