உள்ளூர் செய்திகள்

திருவட்டார் அருகே ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி

Published On 2023-09-18 07:13 GMT   |   Update On 2023-09-18 07:13 GMT
  • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • காட்டாத்துறை ஊராட்சி இளைஞர் காங்கி ரஸ் சார்பாகவும் முளகு மூட்டில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

திருவட்டார் :

அகில இந்தியா காங்கி ரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜிடோ யாத்திரையின் ஓராண்டு நிறைவு ஆனதை யொட்டி பத்மநாபபுரம் தொகுதி இளைஞர் காங்கி ரஸ்சும், காட்டாத்துறை ஊராட்சி இளைஞர் காங்கி ரஸ் சார்பாகவும் முளகு மூட்டில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தொகுதி தலைவர் சக்தி வேல், கண்ணனூர் இளை ஞர் காங்கிரஸ் தலைவர் கிறிஸ்டோபென் ஆசீர் ஆகியோர் தலைமை தாங்கினர். கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோன், இளைஞர் காங்கிரஸ் விஜய், ரூபன், ஸ்டெபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால்சிங், மாவட்ட பொருளாளர் ஐஜபி.லாரன்ஸ், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, வட்டார தலைவர் வழக்கறிஞர் ஜெபா, வேர் கிளம்பி பேரூ ராட்சி தலைவர் சுஜிர்ஜெப சிங்குமார், மாவட்ட பொது ச்செயலாளர் ஜெகன்ராஜ், மாவட்ட செயலாளர் ஆற்றூர் குமார், மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வா கிகள் பலர் கலந்துகொண்ட னர்.

Tags:    

Similar News