இரணியல் அருகே தீக்குளித்த கல்லூரி மாணவி சாவு
- பா.ஜ.க. பிரமுகரின் மகள்
- தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்
இரணியல் :
இரணியல் அருகே குருந்தன்கோடு பட்டன் விளை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 49), மரவேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிவந்திகனி. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சிவந்திகனி குருந்தன்கோடு யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார்.
இவரது மகள் சஜித்ரா (19). இவர் வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சிறு வயதில் இருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் அதற்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி காலை வீட்டு மாடி அறையில் சஜித்ரா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்த நிலையில் தீ காயங்க ளுடன் கிடந்துள்ளார். உட னடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசா ரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்த னர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சஜித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.