உள்ளூர் செய்திகள்

மதுரை பொன்விழா மாநாட்டிற்கு 5 வேன்களில் செல்ல வேண்டும்

Published On 2023-07-31 06:31 GMT   |   Update On 2023-07-31 06:31 GMT
  • குளச்சல் நகர அ.தி.மு.க. முடிவு
  • மீனவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

கன்னியாகுமரி :

குளச்சல் நகர அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடந்தது. குளச்சல் நகர்மன்ற கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் குமாரதாஸ் வரவேற்று பேசினார். துணை செயலாளர் செர்பா தீர்மானங்கள் வாசித்தார்.

மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை, நகர முன்னாள் செயலாளர்கள் தாசீம், கில்லேரியன் மற்றும் நிர்வாகிகள் நாஞ்சில் அனீபா, சிசிலி, ஜெகன், ரமேஷ்பாபு, வெள்ளிச்சந்தை சரவணன், பெலிக்ஸ்ராஜன், ஆனக்குழி சதீஷ், ஆன்றனி, சுபல், தேவிசக்தி, சகாயராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் வருகிற ஆகஸ்டு 20-ந்தேதி மதுரை யில் நடக்கும் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு குளச்சலில் இருந்து 5 வேன்களில் 100-க்கும் மேற்பட்டோர் செல்வது, மீனவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ராஜ்ய சபாவில் வலியுறுத்தி பேசிய தம்பித்துரை எம்.பி.க்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது. நகர அவைத்தலைவர் சிட்டி சாகுல் அமீது நன்றி கூறினார்.

Tags:    

Similar News