உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சி முகமையில் 5 காலி பணியிடங்கள்

Published On 2023-10-17 07:37 GMT   |   Update On 2023-10-17 07:37 GMT
  • விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
  • வெகுஜன ஊடக பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

நாகர்கோவில் :

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டப்பிரிவில் ஊரக பகுதிகளில் சுகாதா ரம், திட, திரவக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் தகவல், கல்வி, தொடர்பு பணிகளை மேற்கொள்ள புறச்சேவை நிறுவனம் மூலம் ஒப்பந்த முறையில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து மாவட்ட திட்ட மேலாண்மை அலகிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரத்தில் 2 பணியிடங்களும், திரவக்கழிவு மேலாண்மை ஒரு பணியிடமும் உள்ளன. இளங்கலை சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது இளங்கலை கட்டிட பொறி யாளர் விண்ணப்பிக்கலாம்.

தகவல், கல்வி தொடர்பு குழு 2 பணியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி வெகுஜன தொடர்பு, வெகுஜன ஊடக பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

விண்ணப்பிக்க நாளை (18-ந்தேதி) கடைசி நாள் ஆகும். நேர்முக தேர்வு அக்டோபர் 25-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். விண்ணப்பங்களை திட்ட இயக்குநர், மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, தூய்மை பாரதம் இயக்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நாகர்கோவில்-1 என்ற முகவரியில் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு drdakkmspare@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Tags:    

Similar News