குளச்சலில் மது விற்க முயன்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது
- 10 மது பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தது தெரியவந்தது.
- 40 மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
குளச்சல் :
குளச்சல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றார்.
குளச்சல் மெயின் ரோடு ஒரு தனியார் மருத்துவ மனை அருகில் சாலையில் செல்லும்போது சந்தேகத் திற்கிடமாக ஒரு மூதாட்டி நின்று கொண்டி ருந்தார். போலீசாரை கண்ட தும், அவர் தப்பியோட முயற் சித்தார்.
போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசா ரணை நடத்தினர். விசார ணையில் அவர் காரங்காடு நுள்ளி விளையை சேர்ந்த பேபி (வயது 70) என தெரியவந்தது. மேலும் அவர் பையில் அனுமதியின்றி 40 மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அவற்றை பறிமுதல் செய்து மூதாட்டியை கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பில் ரோந்து செல்லும் போது பாலப் பள்ளம் நீர்வக் குழியை சேர்ந்த செல்வம் (63) அனுமதியின்றி 10 மது பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் செல்வத்தையும் கைது செய்தனர்.