உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டத்தில் மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2023-10-18 07:30 GMT   |   Update On 2023-10-18 07:30 GMT
  • நாகேந்திரனிடம் 5 பாட்டில்களும், மேரியிடம் 18 பாட்டில்களும் மது பானம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
  • போலீசார் நாகேந்திரன் மற்றும் மேரி-யை கைது செய்து மது பாட்டில்களை பறி முதல் செய்தனர்.

குழித்துறை :

மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தக்கலை கடைவிளை பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் (வயது 58), பாகோடு ஏலாகரை பகுதியைச் சேர்ந்த மேரி (70) ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் பிடித்து சோதனை செய்த போது நாகேந்திரனிடம் 5 பாட்டில்களும், மேரியிடம் 18 பாட்டில்களும் மது பானம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் நாகேந்திரன் மற்றும் மேரி-யை கைது செய்து மது பாட்டில்களை பறி முதல் செய்தனர்.

Tags:    

Similar News