உள்ளூர் செய்திகள்

குளச்சலில் இன்று பரபரப்பு 15 கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்

Published On 2023-03-27 12:38 IST   |   Update On 2023-03-27 12:38:00 IST
  • குடிநீர் இணைப்பு துண்டிப்பை கண்டித்து நடந்தது
  • குளச்சல் நகராட்சி கவுன்சிலர்கள் 15 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

குளச்சல் நகராட்சியில் வீட்டு வரி வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதில் நடப்பு வீட்டு வரி கட்டாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை நகராட்சி எடுத்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று குளச்சல் நகராட்சி கவுன்சிலர்கள் 15 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குளச்சல் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து கோஷம் எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் வீட்டு வரி கட்டாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News