உள்ளூர் செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

Published On 2022-07-24 07:39 GMT   |   Update On 2022-07-24 07:39 GMT
  • உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்
  • 1008 திருவிளக்கு மந்திரங்கள் சொல்லி திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தினர்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கிருத்திகையையொட்டி திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இதே போல் நேற்று சுசீந்திரத்தை சேர்ந்த துர்கா வழிபாடு குழு சார்பில் 38-வது ஆண்டு திருவிளக்கு பூஜை முருகன் சன்னதி முன்பு இரவு 7 மணிக்கு நடந்தது.

இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டு 1008 திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தினர்.

முன்னதாக சாஸ்தா சன்னதி முன்பு ஆளுயர தாய்விளக்கு வைக்கப்பட்டு அதில் விளக்கேற்றி அதனைத் தொடர்ந்து பெண்கள் தங்கள் விளக்குகளை ஏற்றி 1008 திருவிளக்கு மந்திரங்கள் சொல்லி திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தினர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், வரி பாட்டு மன்றமும் இணைந்து செய்திருந்தன.

Tags:    

Similar News