உள்ளூர் செய்திகள்

களியக்காவிைள அருகே மனைவி தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு ஜெயில்

Published On 2023-02-09 09:38 GMT   |   Update On 2023-02-09 09:38 GMT
  • மாமியாருக்கு 7 ஆண்டு தண்டனை விதித்து நாகர்.கோர்ட்டு தீர்ப்பு
  • சசிகலாவிற்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு

நாகர்கோவில் :

களியக்காவிளையை அடுத்த மூவாற்று கோணம்தேவி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27).

இவருக்கும் களியக்கா விளையைச் சேர்ந்த சவுமியா என்பவருக்கும் கடந்த 2019- ம் ஆண்டு திருமணம் நடந்தது.திருமணம் முடிந்த 7 மாதத்தில் சவுமியா தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பளுகல் போலீசார் ராஜேஷ் மற்றும் அவரது தாயார் சசிகலா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா கோட்டில் நடந்து வந்தது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து ராஜேஷ், அவரது தாயார் சசிகலா ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு கூறினார். ராஜேஷுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ ஆயிரம் அபராதமும் சசிகலாவிற்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

Similar News