உள்ளூர் செய்திகள்

லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிட திறப்பு விழா

Published On 2023-11-04 07:26 GMT   |   Update On 2023-11-04 07:26 GMT
  • மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
  • லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்துக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு

நாகர்கோவில் ;

அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்துக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதற்கு லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து தலைவி கட்டித்தங்கம் மணிவர்ண பெருமாள் தலைமை தாங்கி னார். ஊராட்சி செயலாளர் மணிகண்ட இசக்கி வரவேற்புரையாற்றினார்.

வள்ளியூர் யூனியன் தலைவர் ராஜா ஞானதிரவி யம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மங்கை யர்க்கரசி, மாவட்ட பஞ்சா யத்து கவுன்சிலர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் அனிதா, அஜந்தா, கிராம அதிகாரி வைகுண்டராஜன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்தியாகு ரேமோ ஷன் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள், உள்ளாட்சி துறை அதிகாரிகள்,

அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் எஸ்.டி.வேலு ஜான்சன், பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மணிவர்ண பெரு மாள், முன்னாள் துணை தலைவர் தங்கையா உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பஞ்சாயத்து வளர்ச்சிக்காக சிறந்த சேவையாற்றி யவர்களுக்கு பரிசு மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவி கட்டித்தங்கம் மணிவர்ணபெருமாள் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News